பிரதமர் மோடி தமிழனின் பெருமையை எடுத்துக்காட்டி உள்ளார் -பொன் ராதாகிருஷ்ணன்

பிரதமர் மோடி தமிழனின் பெருமையையும், தமிழகத்தின் பெருமையையும் எடுத்துக்காட்டி உள்ளார் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இரு தலைவர்கள் சந்திப்பிற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த தமிழக அரசுக்கு நன்றி.வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வை நடத்திய பிரதமருக்கு தமிழக சட்டப்பேரவையை கூட்டி, நன்றி தெரிவிக்கவேண்டும்.
ஒவ்வொரு நடவடிக்கையிலும் தமிழர்களின் பெருமையை உயர்த்திக்காட்டும் வகையில் செயல்படுகிறார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்பில் தமிழக உணவுகள் அதிகளவில் பரிமாறப்பட்டு கவுரவம் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.