பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கும் நிகழ்ச்சி ! பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

பிரதமர் மோடி-சீன அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு பேனர் வைக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
வருகின்ற 11-ஆம் தேதி சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் உள்ள  மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.இந்தநிலையில் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில்  தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.இதனைதொடர்ந்து தான் பிரதமர் மோடி – சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையின் போது பேனர் வைக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.இன்று இது தொடர்பான விசாரணை நடைபெற்றது.  இதில் பிரதமர் மோடி-சீன அதிபர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரவேற்பு பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும் மக்களுக்கு பாதிப்பின்றி வரவேற்பு பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.