எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா

எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா

மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில்   தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.-க்கள் மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு சில எம்பிக்கள் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினர்.

இதையடுத்து, அமளில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின் இன்று நடைபெற இருந்த மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. வேளாண் சட்டம் தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர் அமளி காரணமாகவும் ,இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்ததாலும் நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில்  இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில்  தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

Join our channel google news Youtube