நாளை சமுக ஆர்வலர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி

வாரணாசியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலமாக உரையாடுகிறார்.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபப்ட்டுள்ளது.இந்த ஊரடங்கு சமயத்தில் சரியான வேலை மற்றும் உணவின்றி தவித்து வருகின்றனர்.உணவின்றி தவிப்பவர்களுக்கு சமுக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் உதவி வருகின்றனர்.மாவட்ட நிர்வாகங்களுடன் சேர்ந்து  உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில்,வாரணாசி பொதுமக்களும் ,அங்குள்ள சமுக ஆர்வலர்களும் சொந்த முயற்சியால் மாவட்ட நிர்வாகங்களுக்கு உதவி வருகின்றனர்.இதன் மூலம் அங்குள்ள ஒவ்வொருவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்துள்ளனர்.கிட்டத்தட்ட 20 லட்சம் உணவு பொட்டலங்கள் மற்றும் 2 லட்சம் ரேஷன் பொருட்களை 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது.இது தவிர  முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவையும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வாரணாசியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அங்குள்ள சமுக ஆர்வலர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி மூலமாக கலந்துரையாடுகிறார்.