தயவு செய்து வெறுப்பேற்றாதீர்கள்! காண்டான சூர்யா! காரணம் என்ன?

  • எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இருவருக்கும் இடையே காதலா? 
  • காட்டமான கருத்தை தெரிவித்த எஸ்.ஜெ.சூர்யா. 

நடிகர் எஸ்.ஜெ.சூர்யா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் இருவரும் இணைந்து மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளனர். இவர்களது நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்ற நிலையில், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்திலும் இருவரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கரிடம் காதலை தெரிவித்ததாக செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து சூர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பிரியா பவானி சங்கரிடம் நான் காதலை வெளிப்படுத்தினேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார் என்று சில முட்டாள் தவறான செய்திகளைப் பரப்பிவருகிறார்கள். மான்ஸ்டர் திரைப்படத்திலிருந்து அவர், எனக்கு நல்ல நண்பர். நல்ல நடிகையும் கூட. தயவு செய்து வெறுப்பேற்றாதீர்கள். அடிப்படையற்ற தவறான செய்திகளைப் பரப்பாதீர்கள். நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.