ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரிய மனு : நாளை விசாரணைக்கு வருகிறது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு  நாளை விசாரணைக்கு வருகின்றது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ,முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் இன்று நீதிமன்ற காவலுக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவை நாளை விசாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.