இந்தியா அணியுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான்.!

இந்தியா அணியுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான்.!

டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தியாவுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான் என்று பதிவு செய்துள்ளார். 

கொரனோ வைரஸ் காரணமாக உலகம் முழுவதும், ஊரடங்கு பிறப்பிக்கப்படுள்ள நிலையில் மேலும் பலரும் வீட்டிலே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான வார்னர், சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஆடி முடித்து, ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்தார் என்று கூறலாம். 

இந்நிலையில் டேவிட் வார்னர், டிக்டாக்கில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார் என்றே கூறலாம், மேலும் தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார், அந்த பதிவில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் நான் மீண்டும் எப்போது மைதானத்திற்கு சென்று விளையாடுவேன் என்று காத்திருக்கிறேன் , மேலும் இந்தியாவுடன் விளையாடுவது ஒரு கடினமான போர் தான் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube