மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் 11 பேர் வேட்புமனு தாக்கல்!

உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு,  மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், பா.ஜ.க. சார்பில் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலங்களவையில் 59 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவதை அடுத்து, வரும் 23-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நேற்று நிறைவடைந்தது.

மத்திய அமைச்சர்கள் பலரும் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். அருண்ஜெட்லி உத்தரப் பிரதேசத்திலும், ரவிசங்கர் பிரசாத் பீகாரிலும், தர்மேந்திர பிரதான் மத்தியப் பிரதேசத்திலும் பிரகாஷ் ஜவடேகர் மகாராஷ்டிராவிலும் மனுத் தாக்கல் செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 10 எம்பிக்களுக்கான இடங்களே காலியாக  உள்ள நிலையில், பா.ஜ.க. சார்பில் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment