பெய்ரூட் குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த புறா – உதவிக்கரம் நீட்டும் இளைஞன், வீடியோ உள்ளே!

லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் குண்டுவெடிப்பில் ஒரு கண்ணை இழந்த புறாவிற்கு நீர் கொடுத்து உதவும் சீரியா நாட்டைச் சேர்ந்த மனிதன்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 2750 டன்க்கும் மேற்பட்ட அமோனியம் நைட்ரேட்டுகள் வெடித்து சிதறியதில் அவ்விடத்தில் இருந்த 150 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 4000 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில்இந்த குண்டு வெடிப்பின் போது அதன் அருகே இருந்த புறா ஒன்று தன்னுடைய கண்களை இழந்துள்ளது. இந்தப் புறாவை கண்ட சீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்த புறாவிற்கு தண்ணீர் கொடுத்து உதவும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal