சிக்கலில் பிகில் ! கதைக்கு காப்புரிமை வழக்கு தொடர மனுதாரருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி

பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நடிகர் விஜய்  இயக்குனர் அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் பிகில் திரைப்படம்.இந்த படத்தில் நயன்தாரா,கதிர்,விவேக் ,யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது .மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.பிகில்” படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது
படம் ரீலீஸ்க்கு சில நாட்களே உள்ள நிலையில் பிகில் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் செல்வா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இப்படத்தை தடை செய்ய என்று செல்வா தொடுத்த வழக்கு இன்று தீரப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.அதாவது பிகில் திரைப்படக் கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர  அனுமதி அளித்துள்ளது.மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உயர் நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.