தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்க்குகள் இயங்காது

தமிழகம் முழுவதும்  நாளை பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடயே  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு தமிழக முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நள்ளிரவு 12 மணி முதல் நாளை இரவு 12 மணி வரை  பெட்ரோல் பங்க் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்க் இயங்காது நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.