அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!

அழுத்தத்தில் அதிமுகவா??செப்.,28ல் செயற்குழுக்கூட்டம்!

செப்.28 அன்று அதிமுக செயற்குழுக் கூட்டம்  நடைபெறும் என்று ஓபிஎஸ்  ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல், சசிகலா விடுதலை, மாவட்டங்கள் பிரிப்பு, பாஜகவுடனான கூட்டணிப் பிரச்சினை, முதல்வர் வேட்பாளர் என்ற அடுக்கடுக்கான சர்ச்சை என்று அதிமுகவில் பல பிரச்சினைகள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் எழுப்பிய நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதன் பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை (18.9.2020 – வெள்ளிக்கிழமை) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மூத்த தலைமைக் கட்சி நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் செப்.,28 காலை 9.45 மணி அளவில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறும் என்றும் கூட்டத்திற்கான அழைப்பிதழ் செயற்குழு உறுப்பினர்களுக்குத் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிமுக அரசியலில் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு இக்கூட்டம் முக்கியமானது என்றும் கட்சியில் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல்  விமர்சகர்கள் நோக்குகின்றனர்.

author avatar
Kaliraj
Join our channel google news Youtube