மதுரை-காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.! நடந்தது என்ன?

சென்னை ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.

சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவரது இல்லம் மதுரையில் மேலமடை பகுதியில் உள்ளது. கடந்த -23-ம் தேதி ஷாஜகான் வீட்டின் முன்பு நின்ற போது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் மது போதையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஷாஜகானுக்கும், ரவுடிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணாநகர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மேல் உள்ள வஞ்சகத்தை மனதில் வைத்திருந்த ரவுடிகளின் நண்பர்கள் நேற்று நள்ளிரவில் இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது, இதனை அறிந்த காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.