பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் – திமுக எம்.பி. தயாநிதி மாறன்.!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அண்மையில் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையை மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் பேசினார். அதில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 35 டாலருக்கு விற்கப்படுகிறது என்றும் ஆனால், அண்மையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்பட்டது என தெரிவித்தார். இது நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதி மாறன், மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்