என்கவுன்டர் தொடர்பாக போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு..!

  • பெண் மருத்துவர் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த எரித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேர் நேற்று போலீசார் என்கவுண்டர் செய்தது.
  • தொடர்பாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • இந்த மனுவை வழக்கறிஞர் ஜி.எஸ் மணி மற்றும் பிரதீப் குமார் ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்த எரித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஓட்டுநர் முகமது ,சென்ன கேசவலு மற்றும்கிளீனர்  சிவா , நவீன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் வைத்திருந்தனர்.பின்னர் போலீசார் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் 10 நாள்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 03-ம் தேதி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிரியங்காவின் செல்போன் மற்றும் சில பொருள்களை பிரியங்காவை கொன்ற இடத்திலே வைத்து இருப்பதாக விசாரணையில் கூறினார். பின்னர் நால்வரையும் பெண் மருத்துவர் பிரியங்கா உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு போலீசார்  அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது போலீசாரை நான்கு பேரும் தாக்கிவிட்டு தப்ப முயன்றதாகவும் , தற்காப்புக்காக போலீசார் 4 பேரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.

இந்நிலையில் நான்கு பேர் என்கவுண்டர் செய்தது தொடர்பாக போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில்  நீதிமன்றத்தின் வழிமுறைகளை போலீசார் பின்பற்றவில்லை என கூறி வழக்கறிஞர் ஜி.எஸ் மணி மற்றும் பிரதீப் குமார் ஆகிய இருவரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

author avatar
murugan