#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!

#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!

வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கு எதிராக இருப்பதால், அதனை எதிர்த்து தென்னிந்திய தேசிய  நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் மத்திய அரசு, வேளாண் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை பல எதிர்ப்புகளையும் தாண்டி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர்.

இந்தநிலையில், வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் விவசாயிகள் நலனுக்கு எதிராக வேளாண் சட்டங்கள் இருப்பதாக தேசிய நதிகள் இணைப்பு சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube