உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 வாரங்கள் அவகாசம் கோரிய மனு ! விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

மாநில தேர்தல் ஆணையத்தின் மனு தீபாவளிக்கு பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது   உச்சநீதிமன்றம்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்பொழுது நடத்தப்படும் என்று கேட்டு கேட்டு மூன்று வருடங்கள் ஓடிவிட்டது.
இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த 4 வாரங்கள் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் மனு தீபாவளிக்கு பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.