வேலூரில் இன்று முதல் 2 நாட்களுக்கு ஜவுளி கடைகள் திறக்க அனுமதி..!

வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இரண்டு நாட்களுக்கு அம்மாவட்டத்தில் அனைத்து ஜவுளிக்கடைகளை திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ரம்ஜான் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் அனைத்து ஜவுளி கடைகள் திறக்க அம்மாவட்ட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், கடைகளில் ஏசி பயன்படுத்தக்கூடாது எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அவர் அறிவுறுத்தினார்.