பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணை கத்தியால் வெட்டிய பெரியப்பா.!

  • வி.எஸ் கே. நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 21 வயது இளம் பெண்ணை துரைராஜ் என்பவர் கத்தியால் தாக்கினார்.
  • தகாத உறவு காரணமாக திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்து யாரிடமும் சொல்லாமல் கோவைக்கு வந்ததாக துரைராஜ் வாக்குமூலம் அளித்தார்.

இன்று கோவை மாவட்டம்  துடியலூர் அடுத்த உள்ள  வி.எஸ் கே. நகர் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 21 வயது இளம் பெண்ணை வயதான நபர் ஒருவர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது அவரை அங்கிருந்து பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த தாக்குதலில் அந்த இளம்பெண்ணின் இரு கைகளிலும் பலத்த காயத்துடன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தாக்குதல் நடத்தியவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் , இவர் ராஜபாளையம் பகுதியை சார்ந்த கட்டிட வேலை செய்து வரும் துரைராஜ் என்பதும் , அந்த இளம்பெண் தனது மனைவியின் அக்கா மகள் என்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த இளம்பெண்ணை துரைராஜ் வளர்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தகாத உறவு காரணமாக திருமணம் செய்து கொள்ள மறுத்து தெரிவித்து யாரிடமும் சொல்லாமல் கோவைக்கு வந்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். மேலும் துரைராஜ் தாக்கப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளதா..? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
murugan