கஜா புயல்…! எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் …! அமைச்சர் எம்.சி.சம்பத்

கஜா’ புயல் கடக்கும் சமயத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று   அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   அமைச்சர் எம்.சி.சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கடலூரில் ’கஜா’ புயல் கடக்கும் சமயத்தில், வாகன ஓட்டிகள் முடிந்த அளவு வாகனங்கள் இயக்குவதை தவிர்த்தும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து இல்லங்களிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தங்கியும் ஒத்துழைப்பைஅளிக்க  கேட்டுக் கொள்கிறேன்.அதேபோல் கடலூர் மாவட்ட மக்கள், புயல் தொடர்பாக அனைத்து வித உதவிகளுக்கும் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment