மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும் – மணிப்பூர் முதல்வர்

வெளி மாநிலங்களில் இருந்து திரும்புவோர் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளாவிட்டால் சிறை தண்டனை. 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், ஒவ்வொரு நாட்டு அரசும் இந்த வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், வெளி மாநிலங்களில் தங்கி வேலை பார்த்தவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வந்த நிலையில், தற்போது 4-ஆம் கட்டமாக போடப்பட்டுள்ள ஊரடங்கானது சில தளர்வுகளுடன் அறிவிக்கப்ட்டுள்ளது. 

மேலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் மணிப்பூர் திரும்பும் மக்கள் கட்டாயம் தங்களைத் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த வேண்டும் என்றும்,  தவறினால் நிச்சயம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.