அச்சத்தில் மக்கள்.! மேலாடையின்றி வந்து பெண்களின் ஆடைகளை திருடி செல்லும் ‘சைக்கோ’.!

  • சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் உள்ளே நுழைந்த மர்மநபர்.
  • பெண்களின் ஆடைகளை மட்டும் திருடிச் செல்லும் நபரால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

சென்னை கிண்டி அடுத்துள்ள ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள தனியார் குடியிருப்பு கட்டிடத்தில் மேலாடையின்றி உள்ளே நுழைந்த மர்மநபர், அங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள ஒவ்வோரு வீட்டின் ஜன்னலாக திறந்து பார்த்து கையில் கிடைக்கும் பொருட்கள் மற்றும் பெண்களின் ஆடைகளை திருடிச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் காலையில் எழுந்து பார்த்த போது மூடிய ஜன்னல் திறந்திருப்பதும், பெண்களின் ஆடைகள் திருடு போனதும் தெரியவந்தது. குடியிருப்புவாசிகள் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதிகாலையில் மர்மநபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஜன்னல்களை திறந்து பார்த்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியிருப்புவாசிகள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி பெண்களின் ஆடைகளை மட்டும் திருடும் சைக்கோ யார்? எதற்காக பெண்களின் ஆடைகளை திருடுகிறார் என போலீசார் தீவிர விசாரணையில் நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்