கடலூர் மாவட்ட மக்கள் தயாராக இருக்க வேண்டும் …!இன்று முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு…!ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் மாவட்ட மக்கள் தயாராக இருக்க வேண்டும் …!இன்று முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு…!ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் மாவட்ட மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று  ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது .அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு இன்றும், நாளையும் (நவம்பர் 21 ஆம் தேதி ) மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்  கடலூர் மாவட்டத்தில், பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இன்று முதல் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.எனவே  கடலூர் மாவட்ட மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று  ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *