யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்-தினகரன்

யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்-தினகரன்

யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். கூறுகையில்,  ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் மத்திய – மாநில அரசுகள் புரிதலோடு செயல்பட வேண்டும் .ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொருட்களுகளில் எந்த பாதிப்பும் வந்து விட கூடாது.அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி என்பது அவர்களுடைய ஆசை, யார் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube