தென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை.!

தென் கொரியாவில் இருந்து மேலும் 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வருகை.!

இன்று 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்திறங்கியுள்ளது.  

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த பி.சி.ஆர் பரிசோதனை கருவிகளை தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து வாங்க ஆர்டர் செய்துள்ளது.  

வாரா வாரம் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்துகொண்டிருக்கின்றன. அந்த வகையில், 1.5 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தற்போது தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்திறங்கியுள்ளது.  

ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் இருந்து சுமார் 4 லட்சம் பி.சி.ஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube