தமிழகத்தில் பன்றி காய்ச்சல் தொடர்ந்து பரவிக்கொண்டு இருக்கிற நிலையில், பல உயிர்களையும் காவு வாங்கியுள்ளது. சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்றிலிருந்து இன்று வரை அருண் (32),சக்ரியா (50), முத்துசாமி (58) மற்றும் சிவானியா என்ற 2 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளது.