ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது.! வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு.!

ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது.! வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு.!

  • ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை, பான் கார்டுடன் இணைக்காவிட்டால் அடுத்த மாதம் 31-ம் தேதி முதல் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இனிமேல் கால நீட்டிப்பு இருக்காது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு வழங்கப்படும் 10 எண்களைக் கொண்ட பான் கார்டின் ஆதார் எண்ணை இணைக்க பலமுறை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரை 30 கோடியே 75 லட்சம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். 17 கோடியே 58 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை. இந்த சூழலில், தற்போது வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அடுத்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் பான் கார்டு செல்லாது என வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை ஆதார் எண்ணை இணைக்காதவர்கள்  https://www.incometaxindiaefiling.gov.in/home என்ற லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் சென்று இணைக்கலாம். இதற்காக ஆவணங்கள் எதுவும் தனியாக தேவையில்லை. ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண் மட்டும் இருந்ததால் போதும். இந்த இரண்டு எண்ணைகளையும் கொடுத்த பிறகு ஆதாரில் உள்ளது போலவே உங்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு கேப்சா எனப்படும் குறியீடு அல்லது ரகசிய எண்ணை (OTP) கொடுத்து ஆதார், பான் கார்டை இணைக்கலாம்.

பின்னர் இரண்டும் இணைக்கப்பட்டுவிட்டால் ஆதாரின் கடைசி 4 இலக்க எண்ணுடன் உறுதிபடுத்தப்பட்ட தகவல் வரும். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் இதனை பதிவு செய்யலாம். UIDPAN ஒரு இடைவெளி விட்டு 12 இலக்க ஆதார் எண்ணை டைப் செய்த பிறகு ஒரு இடைவெளி விட்டு பான் கார்டு எண்ணையும் பதிவு செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு அனுப்பினால் இரண்டும் இணைக்கப்பட்டுவிடும். குறிப்பாக பான் கார்டு செல்லாது என்றால் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மார்ச் 31க்கு பின் எப்போது ஆதார் எண்ணை இணைக்கிறோமோ, அப்போதுதான் பான் கார்டு மீண்டும் செல்லுபடியாகும்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube