இன்னும் இரண்டு நாள் அவகாசம் தான் உள்ளது! பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்தே ஆகவேண்டும்!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்காக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க்க சொல்லி வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதற்கான கடைசி தேதி மார்ச் 31 என அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் தேதி கால நீட்டிப்பு கொடுத்து கொடுத்து செப்டம்பர் 30 என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் வருமான வரி தாக்கல் செய்வதற்காக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவே கடைசி தேதி. பின்னர் தேதி நீட்டிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பான் எண் ஆதாருடன் இணைக்க படாமல் இருந்தால், அந்த பான் எண் கலவாதியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.