“பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்” – கே.எஸ்.அழகிரி!

“பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்” – கே.எஸ்.அழகிரி!

கொரோனா பரவலை கருத்தில் கொண்ட காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பொதுமக்கள் முதல் முதல்வர் வரை அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்ட காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை தனது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடுகளை தோழர்கள் செய்து வருவதை தாம் அறிந்ததாகவும், கொரோனா பரவும் நேரத்தில் தன்னை சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறுவதைத் தவிர்க்க விரும்புவதாகவும், தன்னை சந்தித்து வாழ்த்துக் கூற யாரும் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Join our channel google news Youtube