தொலைக்காட்சி நிகழ்ச்சி… தொகுப்பாளரை பளார் விட்ட பாகிஸ்தான் அமைச்சர்.. உச்சகட்ட அதிர்ச்சியில் உலக ஊடகங்கள்..

  • நம் அண்டை நாடான பாகிஸ்தானில் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு  கருத்து ஒன்றை கூறினார்.
  • அதற்க்கு, அந்த இடத்திலேயே கண்ணத்தில் அறைந்த பாகிஸ்தான் அமைச்சரின் செயல் ஊடகத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில்,  ஒரு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அமைச்சரிடம், டிக் டாக்கில் பிரபலமான ஹரீம் சிங் என்ற பெண்ணுடன் தொடர்புபடுத்திய பேசியதற்காக டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் முபாஷீனை அறைந்ததாக, அந்நாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர்,  நான் முதலில் இந்த சமூகத்தில் ஒரு மனிதன்.இந்த  அமைச்சர் பதவி என்பது இன்று  வரும் நாளை  போகும்.

Image result for mubashir

ஆனால், என்  மீதான தனிப்பட்ட விமர்சனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள மாட்டேன் பொருத்துக்கொள்ளவும் மாட்டேன். ஒரு  உண்மைக்கு புறம்பான  குற்றச்சாட்டை கூறும் போது, அதற்கு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டியது உடனடியான அவசியமாகும். என்று கூறினார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களுடன் அமைச்சர் இப்படி நடந்து கொள்வது ஒன்றும்  புதிதும் அல்ல இது முதல்முறையும்  அல்ல. இதேபோல்,  கடந்த ஆண்டு ஜூன் மாதம், திருமண நிகழ்ச்சி ஒன்றிலும் தொலைக்காட்சி  நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவரை அறைந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

author avatar
Kaliraj