மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்த பாக்.அமைச்சர் …

பாகிஸ்தான்  போலீசார்  தெரிவித்துள்ளதில் அந்நாட்டு அமைச்சர் ஒருவர் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

Image result for mir hazar khan bijarani

மிர் ஹசர் கான் பிஜரானி என்ற அமைச்சரின் வீடு நீண்ட நேரமாக தட்டியும் திறக்கப்படாததால், அவரது மகனும், வேலையாட்களும் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது, தாயும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடைப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களோடு வந்த போலீசார் ஒரே துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டாக்களிலேயே இருவரும் பலியாகியிருப்பதாகவும், துப்பாக்கி மிக அருகில் இருந்து சுடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தையும், பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் ஆய்வு செய்ததில் அமைச்சர் மனைவியைக் கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்திருக்கக் கூடும் என கணித்துள்ள போலீசார் குடும்பத்தகராறா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Leave a Comment