விராத் கோலி எங்களுக்கு வேண்டும்! பாகிஸ்தான் ரசிகர்கள் அன்பு கோரிக்கை…

பாகிஸ்தான் ரசிகர்கள் அன்பு கோரிக்கை, பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி விளையாடுவதை பார்க்க வேண்டும் என்று கோரிக்கை  வைத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது தொடர்ச்சியான ரன் குவிப்பால் உலக முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கிறார். அதனை உணர்த்து வகையில் பாகிஸ்தான் ரசிகர்கள் விராட் கோலி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் ஐபிஎல் தொடரை போன்று, பாகிஸ்தான், பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற சர்வதேச வீர்ர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது.

மூன்றாவது சீசன் பிஎஸ்எல் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் கராச்சி, லாகூர், பெஷாவர், குவெட்டா, இஸ்லமபாத் முல்தான் ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில் இஸ்லமாபாத் யூனிடட், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர், விராட் கோலி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடுவதை நாங்கள் பார்க்க  வேண்டும் என்று அட்டையில் எழுதி விராட் கோலி மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.

தற்போது அந்த வாசகத்தை கையில் எந்திக் கொண்டிருந்த ரசிகர்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Leave a Comment