நெல்லை தம்பதிக்கு “அதீத துணிவுக்கான “விருது – தமிழக அரசு !

நெல்லையில் கடந்த  சில நாட்களுக்கு முன் சண்முகவேல் மற்றும் அவரது மனைவி செந்தாமரை அவர்களது தோட்ட வீட்டில் இருந்தபோது  இரண்டு திருடர்கள் அரிவாளோடு வந்து அவர்களை தாக்கி திருட முயற்சி  செய்தனர்.

அப்போது  அந்த வயதான தம்பதியினர் பயம் இல்லாமல் தங்கள் கையில் கிடைத்த பொருள்களை கொண்டு அவர்கள் மீது வீசி அரிவாளோடு இருந்த அந்த இரண்டு திருடர்களை அடித்து விரட்டினர். பயப்படாமல் திருடர்களை  விரட்டி அடித்த இந்த வீரத்தம்பதியை பலர்  பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களுக்கு அதீத துணிவுக்கான விருது தமிழக அரசு அறிவித்து உள்ளது. நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் பழனிசாமி அந்த வீரத் தம்பதிக்கு விருதை வழங்குகிறார்.

author avatar
murugan