பா.சிதம்பரம் கருத்து வேதனைக்குரியது -பொன்.ராதாகிருஷ்ணன்

பா.சிதம்பரம் கருத்து வேதனைக்குரியது  என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.

அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக  வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனையும் செய்யப்பட்டது.ஆனால் இது ஒருபுறம் மறுபுறம் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஒவ்வொரு ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில்  கன்னியாகுமரி மாவட்டம் கல்லுப்பாலம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்  அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர்  பொன்.ராதாகிருஷ்ணன்.அப்போது அவர் பேசுகையில், நாட்டை ஒற்றுமைப்படுத்தி பார்க்கவேண்டிய ப.சிதம்பரம் ,பாஜகவை வடஇந்திய கட்சி என தெரிவித்தது தவறானது,பாஜகவின் தேசிய தலைவராக தமிழர் இருந்துள்ளார் என்பது ப.சிதம்பரத்துக்கு தெரியும் ,அவரது கருத்து வேதனைக்குரியது.பாஜக பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை என்று  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment