#BREAKING : சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பத்தை அமலாக்கத்துறை கைது செய்தது.
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிலையில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பத்தை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.மேலும் தேவைப்பட்டால் ப.சிதம்பரத்தை கைது செய்யவும் அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது .இதனையடுத்து இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தினார்கள்.விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்தனர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.