300-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள்காலி- ராமதாஸ் வேதனை

பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், இந்தியா முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 300-க்கும் மேற்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் காலியாக இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.அண்ணா பல்கலையில் 300-க்கும் மேற்பட்ட  இடங்கள் காலியாக இருப்பது வருத்தமளிக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகங்களில் உள்ள 300 காலி இடங்கள், முன்னணி தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள காலி இடங்கள் ஆகியவற்றை நிரப்ப தமிழக அரசும், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகமும் இணைத்து சிறப்பு கலந்தாய்வு நடத்த முன்வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.