நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்-அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அரசின் நடவடிக்கைகள் காரணமாக நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

அடுத்த ஆண்டு 5 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .அப்போது 2017-18-ஆம் ஆண்டில், பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு, 3 மாதங்களில்  மடிக்கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.