10 ஆம் வகுப்பு தேர்வு மையங்களை கண்காணிக்க உத்தரவு!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதும் தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 15-ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் முழுமையாக உள்ளதா? என தேர்வு மைய ஆசிரியர்கள் கண்காணித்து அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வு மையத்தில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டதா? தூய்மையாக உள்ளதா? சனிடைசர் ஆகியவை உள்ளிட்ட வசதிகள் இருக்கின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட 3825 மையங்கள் முதன்மை மையங்களாகவும், தேர்வு மையங்களாக அமைக்கப்பட்ட பள்ளிகள் துணை மையங்களாகவும் கருதப்படுவது கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal