தமிழகம், புதுச்சேரியில் உள்ள சில மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்"..!

தமிழகத்தில் கனமழை முதல் மிக  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கிழக்கு திசையை காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்களில்  நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.
நாளையும், நாளை மறுநாள்  தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யவாய்ப்பு உண்டு.  இன்று கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர்,  புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி  மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யவாய்ப்பு உள்ளது.
தமிழகத்தின் நேற்று இரவில் இருந்து பல இடங்களில் மழை கன மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை எழும்பூர், கிண்டி, வேளேச்சேரி, வடபழனி, கோயம்பேடு, தாம்பரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இன்று கனமழை காரணமாக சென்னை , நாகை , காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள சில மாவட்டங்களுக்கு “ஆரஞ்ச் அலர்ட்” கொடுக்கப்பட்டு உள்ளது.

author avatar
murugan