பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்! – ஓ.பி.எஸ் பேட்டி!

பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்! – ஓ.பி.எஸ் பேட்டி!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலும், தமிழ்நாட்டில் மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களும் முடிவடைந்துள்ள நிலையில் இதன் முடிவுகள் மே 23இல் வெளியாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் படி முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் தங்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடன் இன்று விருந்து ஒன்றை பாஜக ஏற்பாடு செய்துள்ளது. அதில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் அண்மையில் ஒரு பேட்டியில் கூறுகையில், ‘ பாஜக அமைச்சரவையில் பங்கேற்பது குறித்து 23ஆம் தேதி நடைபெறும் அதிமுக கழக நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்யப்படும்.’ என தெரிவித்தார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *