ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்த வழக்கு ! இறுதிக் கெடு விதித்த நீதிமன்றம்

  • ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
  • இந்த வழக்கு தொடர்பாக ஜனவரி 23-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார்.

ஆனால் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை மிலானி என்பவர் தொடர்ந்தார்.வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக  வழக்கில் புகார் தெரிவித்தார்.

இந்த வழக்கை இன்று  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பதில் மனு தாக்கல் செய்ய தேனி எம்.பி.  ரவீந்திரநாத் குமாருக்கு இறுதிக் கெடு விதித்துள்ளது.இந்த வழக்கில் ஜனவரி 23-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.