இபிஎஸ்-ஓபிஎஸ் இணைந்து எத்தகைய நிதி நெருக்கடியையும் சமாளிப்பார்கள்!

திருச்சி அருகே, பள்ளிக்கல்வி துறை சார்பில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளுக்கான தொடக்க விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையின், பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
மேலும், தனியார் பள்ளிகளில் கட்டண வேறுபாடுகளை சரிசெய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சரிசெய்யப்படும், என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, கோபிசெட்டிபாளையத்தில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் “அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர்கள் கேட்கும் ஊதியத்தை கொடுக்க அரசுக்கு மனம் உள்ளது. ஆனால் நிதியில்லை” என்று  தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com

Leave a Comment