எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன- முதலமைச்சர் பழனிசாமி

எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன- முதலமைச்சர் பழனிசாமி

எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன என்று  முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.பேரவையில், என்.பி.ஆருக்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்ற  எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,   என்.பி.ஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களை தூண்டி விடுகின்றன.சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள்.உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பதட்டமான சூழலை உருவாக்க வேண்டாம் என்று பேசினார். 

Join our channel google news Youtube