48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது-  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,5.2 லட்சம் மக்கள் தொகையுடன் 48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.இதற்காக முதல்வர், துணை முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர் ஆகியோருக்கு ஆவடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.