காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல்!

காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல்!

காஞ்சிபுரத்தில் இரு கூட்டாளிகளிடம் இருந்து 350 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எல்லாம் ரகசியமாக கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டு வருவதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் இருந்த குன்றத்தூர் காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவர் கடையில் குட்கா விற்கப்பட்டதை கண்டறிந்து அங்கு சென்று அவரிடமிருந்து குட்கா பறிமுதல் செய்துள்ளனர்.

அவர் மட்டுமல்லாமல் குரோம்பேட்டையை சேர்ந்த சுப்பையா என்பவரும் இவருடன் இணைந்து குட்கா விற்று வந்துள்ளார். சுமார் 200 கிலோ குட்காவை இவர்கள் இருவரிடமுமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவடி டேங்க் பேக்கரி பகுதியில் விசாரித்த பொழுது, மேலும் கருப்பசாமி, ரமேஷ் ஆகிய இருவரிடமுமிருந்து 150 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube