ஆன்லைன் மோசடியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு!!

ஆன்லைன் மோசடியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு!!

ஆன்லைன் மோசடியில் தமிழகத்தை சேந்தவர்கள் அதிக பணத்தை இழந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரங்களில், 2016-17 முதல் 2018-19 வரை தமிழகத்தில் அதிபட்சமாக 56 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. 46 கோடிகளை இழந்து இரண்டாம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. 31 கோடிகளுடன் மூன்றாம் இடத்தில் ஹரியானா உள்ளது. நான்காம் இடத்தில் 18 கோடி இழப்புடன் டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 644 ஆன்லைன் மோசடிகள் நடந்துள்ளது . குறிப்பாக,இந்த ஆன்லைன் மோசடியில்  முதியவர்கள் தங்களின் பணத்தை அதிகளவில் பறிகொடுத்துள்ளனர் . இதற்கான முக்கிய காரணம், தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து அறியாமல் இருப்பதே ஆகும்.

Join our channel google news Youtube