ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக மட்டும் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல்

ஒரே நாளில் ஆன்லைன் மூலமாக மட்டும் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

2018-19-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த 31-8-2019 அன்று  கடைசி நாள் ஆகும். மாத சம்பளம் வாங்குபவர்கள், ஓய்வூதியதாரர்கள், மூலதன ஆதாயம், தொழில் வருமானம் பெறுபவர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த வரி செலுத்துபவர்கள் அன்று வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட தகவலில்,ஆன்லைனில் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது.   ஒரே நாளில்(நேற்று முன்தினம்) ஆன்லைன் மூலமாக மட்டும் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்  என்று தகவல் தெரிவித்துள்ளது.