நாளை முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்

நாளை முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்,    ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.எனவே  பள்ளி , கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்க தமிழக அரசால் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே  தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த வகுப்பில், முதலாமாண்டு மாணவர்களை தவிர, அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் வகுப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.