ஐபிஎல் தொடரின் 44 ஆம் போட்டியில் சென்னை அணிக்கு 146 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது பெங்களூர் அணி.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது நடைபெறும் 44 ஆம் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பெங்களூர் அணி மோதி வருகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் படிக்கல் – பின்ச் கூட்டணி களமிறங்கியது. இருவரும் நிதானமாக அடிவர, 15 ரன்களில் பின்ச் தனது விக்கெட்டை இழக்க, அவரையடித்து 22 ரன்கள் அடித்து படிக்கல் வெளியேறினார். அதன்பின் கோலி – டி வில்லியர்ஸ் கூட்டணி களமிறங்கி அதிரடியாக ஆடிவந்தனர்.
பின்னர், 39 ரன்கள் அடித்து டி வில்லியர்ஸ் வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய மொயின் அலி, 1 ரன் மட்டுமே அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து அரை சதம் அடித்து கோலி வெளியேற, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இறுதியாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது.
146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது சென்னை அணி களமிறங்கவுள்ளது. பந்துவீச்சை பொறுத்தளவில் சென்னை அணியின் சாம் கரண் தலா 3 விக்கெட்களும், தீபக் சாஹர் தலா 2 விக்கெட்களும், சான்டனர் ஒரு விக்கெட்டை எடுத்தார்.