என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவுகளில் ஒன்று எனது திருமணம் : நடிகை ரேவதி

நடிகை ரேவதி 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மண் வாசனை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் சினிமாவில் நடிப்பில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டார். அதன் பின் விவாகரத்துக்கு பின் மீண்டும் நடிக்க துவங்கினார்.

இந்நிலையில், இவர் தனது திருமணம் குறித்து கூறுகையில், என் வாழ்க்கையில் நான் எடுதத தவறான சில முடிவுகளில் முக்கியமானது, என் திருமணம். அப்போது கொஞ்சம் நிதானமாக முடிவு எடுத்திருந்தால், என் சினிமா பாதகி வேறு மாதிரி மாறியிருக்கும் என்றும், இன்னும் கூட நிறைய நல்ல படங்களில் நடித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.